Search This Blog

Saturday, March 15, 2014

வாழ்த்து மடல்


கல்வியமுதே!!!!
 நீவிர்,    கரை காணத் துடிக்கும் கடலலை;
                கல்வியெனும் காலச்சுவட்டிலே
                கடிகாரமாய் சுழல்பவள்;
                முயற்சி என்னும் சொல்லுக்காக
                மூச்சடக்கி முத்துக் குளிப்பவள்; – என்
                முத்துக்குமரனின் முழுமதியைப் பெற்றவள்;
                முதல்வராய் மட்டுமன்றி - முதன்மைக்
                கல்வி அதிகாரியாகிய அலைமகள்;
                பணியில் பைரவி;
                பார்வையில் பார்வதி;
                கனிவில் இமயம்;
                கருணையில் கார்முகில்.
தயையே !!
நீவிர்,     புகழ்ச்சியை விரும்பாதவள்;                                                                
                புறம் பேசத் தெரியாதவள்;
                கல்விக் கரையினில் -களைந்தெடுத்த
முத்தாய்ப் பிறந்தவள்.
அன்னையே !!
                உம்மை அள்ளி அரவணைத்தவரும் -
                அருந்தவம் செய்தவரோ?
                இல்லை!! அள்ளி முடிந்தவரும் -
                அரும்பேறு பெற்றவரோ?
                என்ற வினாவுக்கு
                இருவிடை பகிர்தலன்றி ;
                ஒருவிடையாய் உதித்தெழுந்த வித்தகியே !!

அமுதே!!
                பல்லோர் குழுமி -
                நற்சான்றிதழ்களை அளிக்கும் போது;
                என் நா ஆடாமல், அகமாட ஆரம்பித்தது!!
                உமது பெற்றோரை நினைக்கத்தூண்டியது!!
                அதைவிட - கனியமுதன்,
                காவலன்;
கட்டியங்காரன்;
                ஓடத்திற்கு துடுப்பாய்ச் செயல்பட்டவன்;
                அவனன்றி – அம்மையீர்! ஓர் அணுவும்
அசைந்திருக்க முடியாது என்று
எனது அகமாடியது, அழகாக!!!!
அன்று……
                பெற்றோருக்குப் பெருமகளாய்
                பேரின்பப் பெருமை சேர்த்தாய்!!
இன்று……
                மாலையிட்ட மணாளனுக்கும்;
                மடியில் தூளியைக் கட்டியவளுக்கும்;
                பெற்ற சிராருக்கும்;
                சிந்தை மகிழ உவகை நல்குகிறாய்.
ஆனால்! என் பிம்பம்
கண்ணொளிக்காட்சியை மட்டுமே
இன்று கண்டுகளித்த வண்ணம்
இருந்ததே தவிர;
வாய் முனையவில்லை
வாழ்த்துதலைக் கூற………..
ஏன்?
                என் நிழலும் நிழலாட மறுக்கிறது?
                என - என் நிழலிடமே
                நிற்கதியாய் நின்றேன்….
                அங்கும் மௌனம்!! மௌனம்!!
                வியப்பு !! வியப்பு!!
ஆம்
                விரிசிந்தனையாளர்;
                விறுவிறுப்பான கல்வி அலுவலர்               ;
                தெவிட்டாத திட்டமிடுதல்;
                பண்முகப் பார்வை;
                பேச்சில் நாவலர்;
                பிள்ளைக் கனியமுது;
                பெரும்பிராட்டி;
                இப்படிப் பல கோணங்களில்!!
                பரிணமிக்கும் தாங்களுக்கு
                வாய்ஜாலம் சிறந்ததன்று !!
செம்மொழியான என் தமிழ்மொழிப்பாவே சிறந்தது!!!!
என முடிவு செய்து
திரளும் என் எண்ணக்கருத்தை
திரவியத் தமிழில் தரவேண்டி……..
தாமதித்தேன்!!
தந்தேன் இப்பொழுது!!!

முதல்வரே!!
                முனைவர் பட்டம் -
                உமது முயற்சியின் முக்கனிச் சாறு;
                இஃது உமக்கே உரியச் சாத்தியக் கூறு;
                சலசலப்புக்கு அஞ்சாத சங்கரிக்கு
                சகல நலன்களையும் தரவேண்டி
                எனது முதல்வனை ;
                முத்துக்குமரனை வேண்டுவது மட்டுமே
                நான் என் தமிழில் கூறும்
                வேண்டுதலே தவிர……………
வாழ்த்துதலை!!
                வாழ்ந்த ஆன்றோர் போற்ற;
                நான் உம்மை இன்று
                வணங்கி நிற்கிறேன்
                என் தமிழ்ப்பாலால்…..



சித்ர கலா . ப


No comments:

Post a Comment

Translate