Search This Blog

Sunday, October 31, 2010

எந்த வகை நீங்கள்???????

நன்னூல் ஆசிரியர் பவனந்தி முனிவர் பொதுப்பாயிரத்தில் கூறும்
                                    மாணாக்கரின் வகை.

          தலை மாணாக்கர்           (எ.கா)அன்னம், பசு


          இடை மாணாக்கர்           (எ.கா)மண், கிளி
                    
                
          கடை மாணாக்கர்           (எ.கா)இல்லிக்குடம், ஆடு, எருமை, நெய்யரி

தலை மாணாக்கர்-
                        அன்னமானது, பாலையும் நீரையும் கலந்து வைத்தால் நீரை நீக்கி பாலை மட்டும் பருகும் இயல்புடையது. அது போல் தலை மாணாக்கர் குணத்தையும், குற்றத்தையும் வேறுபிரித்துக் குணத்தை மட்டுமே கொள்வர்.
                        பசு, மிகுந்த புல் உள்ள இடத்தை கண்டால் வயிறு நிறைய மேய்ந்து பின் ஓரிடத்தில் தங்கிச் சிறிது சிறிதாக வாய்க்குள் கொண்டு வந்து மென்று தின்னும். அது போல் தலை மாணாக்கர் ஆசிரியரைக் கண்டால் தன் உள்ளம் நிறையக் கேட்டு பின் ஓரிடத்தில் தங்கிச் சிறிது சிறிதாக நினைவுக் கொண்டு வந்து சிந்திப்பர்.
                      

இடை மாணாக்கர்-
                       மண், உழவர் வருந்திப் பயிர்செய்யும் முயற்சியின் அளவிற்கு ஏற்ப விளைவைக் கொடுக்கும், அதுபோல் இடை மாணாக்கர் ஆசிரியர் வருந்திக் கற்பிக்கும் முயற்சியின் அளவிற்கு ஏற்ப கல்வியறிவு பெறுவர்.
                       கிளி, தனக்கு கற்பித்த சொல்லையே சொல்லும். அது போல் இடை மாணாக்கர் ஆசிரியர் கற்பித்த கருத்துக்களையே திருப்பிச் சொல்வர்.


கடை மாணாக்கர்-
                       இல்லிக்குடம், நீரை ஊற்றுந்தோறும் ஒழுகவிட்டுவிடும். அது போல் கடை மாணாக்கர் நூற்பொருளைக் கற்பிக்குந்தோறும் மறந்து விடுவர்.
                       ஆடு, ஒரு செடியில் தழை நிறைந்திருந்தாலும் அங்கு மேயாது பல செடிகளுக்கும் சென்று மேயும். அது போல் கடை மாணாக்கர், ஓராசிரியரிடம் மிகுந்த கல்வி இருந்தாலும் அங்கு நிறைய கற்காமல் பலரிடமும் சென்று கற்பர்.
                       எருமை, குளத்து நீரை கலக்கிக் குடிக்கும், அது போல் கடை மாணாக்கர் ஆசிரியரை வருத்திப் பாடம் கேட்பர்.
                      நெய்யரி, தன்னிடம் வார்க்கப்படும் தேன் முதலியவற்றைக் கீழே விட்டுவிட்டு அழுக்கு முதலியவற்றைத் தன்னிடம் தேக்கிக் கொள்ளும். அது போல் கடை மாணாக்கர் தமக்கு கற்பிக்கப்படும் நற் கருத்துக்களை மறந்துவிட்டுத் தீய கருத்துக்களையே சிந்தித்துப் பற்றிக் கொள்வர்.

[பொருள்- அன்னம்-அன்னப்பறவை , தலை மாணாக்கர்-முதல் மாணாக்கர்,  இல்லிக்குடம்-ஓட்டைக்குடம், தழை-இலை, நெய்யரி-வடிகட்டி]

மாணவர்களே நீங்கள் இதில் எந்த வகை மாணாக்கர் ???
எப்படிப் பட்ட மாணாக்கராக இருக்க ஆசைப்படுகிறீர்கள் ???
              சிந்தியுங்கள்                       செயல்படுங்கள்
          உங்கள் கருத்துக்களை தெரிவியுங்கள்............................

அப்பா

அப்பா என்பது மூன்று எழுத்துதான் - ஆனால்

அவர் பெருமையை சொல்ல மூன்று

கோடி எழுத்தும் போதாது . என் தந்தையும்

அப்படித்தான்!!!!!!!!!!!!!!!!!!
                                               - ஆகாஷ்(எ )அகிலன் .
                                                                                                
                                                            

Friday, October 29, 2010

அம்மா

          அருமை, பெருமை தருவாய் அம்மா!!

          பொறுமையும் நீ தருவாய் அம்மா!!

          நன்றாக வளர்த்து சிறந்த
                         மனிதனாக்குவாய் அம்மா!!

          அகிலத்தில் அகிலனாய் அழகுற
                                வைத்தாய் அம்மா!!

               ----ஆகாஷ்(எ)அகிலன் (என் மகன்)

யார் அவள் ?????

                          அகிலத்தின் அன்பு தெய்வம் ........?

                          அயராது பாடுபடும் ஆலய தெய்வம் ........?

                          அன்பெனும் மழையைப் பொழிபவள் ........?

                          அழகிய ஒளியாய் ஒளிர்பவள் ........?

                          அன்னமிடும் கையால் அரவணைப்பைத் தருபவள் ........?

                          அப்பழுக்கற்றத் தூய்மையால்
                                                                   துன்பத்தைத் துடைப்பவள் ........?

                                             .............அவளே...................

                          இவ்வுலகில் எனக்கு வாழ்வைத் தந்து

                          என் உயிராகவும் ()

                                         உடலாகவும் (ம்)

                                  உயிர் உடலாகவும் (மா)

                          என்னுள் இருப்பவளே,

                                            எனக்கு இனியவளே,

                                                           எனக்கு உயிரைக் கொடுத்தவளே

                     அம்மா!!         அம்மா!!         அம்மா!!         அம்மா!!         அம்மா!!

Wednesday, October 27, 2010

தமிழ் வணக்கம்

                                                சில்லென்ற தென்றலாய்!,

                                                   தண்ணிழல் திங்களாய்!

                                                தெவிட்டாத முக்கனியாய்!,

                                                   உலா வரும் சூரியனாய்!,

                                           மூவுலகம் போற்றும் முத்தாய்ப்பாய்!,

                                            என்றென்றும் எட்டுதிக்கும் விளங்கும்,

                                                என் தமிழே! தமிழ் மொழியே!!

                                               செம்மையான செம்மொழியே!,

                                           சிந்தைக்கினிய தமிழ் வணக்கம் பல......................
                          
                              

Translate