Search This Blog

Tuesday, December 28, 2010

மார்கழி 12 - பாடல்+விளக்கம்

விடியற்காலை பனியில் நனைந்து ஸ்ரீ ராமனின் புகழைப்பாடி உன் வீட்டிற்கு முன் நிற்கும் எங்களின் குரலை கேட்டும் உறங்குவதேன்?

கனைத்து இளங் கற்றெருமை கன்றுக்கு இரங்கி
நினைத்து முலைவழியே நின்றுபால் சோர
நனைத்து இல்லம் சேறாக்கும் நற்செல்வன் தங்காய்!
பனித்தலை வீழ நின் வாசற்கடை பற்றிச்
சினத்தினால் தென்னிலங்கைக் கோமானைச்செற்ற
மனத்து கினியானை பாடவும் நீ வாய் திறவாய்
இனிதான் எழுந்திராய், ஈதென்ன பேருறக்கம்,
அனைத்து இல்லத்தாரும் அறிந்தேலோரெம்பாவாய்.

விளக்கம்:
                                "இளங்கன்றுகளுடைய எருமைகள், பால் கறப்பார் இல்லாமையால், தன் முலைக்காம்புகள் கடுத்து, தன் கன்றுகளை நினைத்து, முலைக்காம்புகளின் மூலம் பால் இடைவிடாது சுரந்து, அதனால் வீடு முழுவதும் ஈரமாகி, சேறாகியிருக்கும் பெருஞ்செல்வனின் இல்லத்து தலைவனின் தங்கையே! சீதாபிராட்டியை தன்னிடமிருந்து பிரித்ததால் சினம் கொண்டு, இலங்கை வேந்தன் ராவணனைக் கொன்ற மனத்திற்கினிய ராமனின் திருப்புகழை, பனித்துளிகள் எங்கள் தலையில் விழ உன் மாளிகையின் வாசத்தூணைப்பற்றிக்கொண்டு, நாங்கள் பாடிக்கொண்டிருப்பதை கேட்டும் நீ எழுந்த பாடில்லையே! ஊரில் இருப்போர் அனைவரும் எழுந்துவிட்டபின்னரும் நீ எழவில்லையே! உன் ஆழ்ந்த உறக்கத்தின் பொருளென்ன?"


No comments:

Post a Comment

Translate