Search This Blog

Tuesday, December 14, 2010

...கற்றலில் மறதி...


மறதி

         நாம் கற்றுக்கொண்டதை அல்லது பெற்ற அனுபவத்தை தேவைப்படும் போது மீண்டும் நினைவு கூற இயலவில்லையென்றால் அதனை மறதி அல்லது மறத்தல் என்று கூறுவர்.


 
மறத்தலின் காரணிகள்

    மறத்தல் என்பது இரு காரணிகளைக்(factors) கொண்டது. அவை,

  1. நாம் கற்கும்போது கற்ற பொருள் நம் மனதில் எவ்விதம் பதிந்துள்ளது.
  2. கற்றனவற்றை அழிக்கக்கூடிய காரணிகளின் வலிமை எத்தகையது என்பதைப் பொறுத்தது.

மறத்தலின் காரணங்கள்

  • கற்றனவற்றை நாம் நீண்ட நாட்கள் பயன்படுத்தாமல் இருப்பது.
  • நினைவு கொண்டுவருவதற்கு ஏற்ற சரியான தூண்டல்களை(stimuli) நாம் ஏற்படுத்தாதது.
  • பின்னோக்கத் தடை, முன்னோக்கத்தடையின் தீவிர மனவெழுச்சி
    பின்னோக்கத்தடை(retroactive) - புதிதாய் கற்ற பாடப்பொருள் அதற்கு முன் கற்றவற்றைப் பாதிப்பதும்.
    முன்னோக்க்கத்தடை(proactive) - முன்பு கற்றவை, அடுத்துக் கற்பனவற்றை மனத்திருத்தலில் குறுக்கிட்டு அவற்றை மறக்குமாறு செய்யும்.
  • அச்சம், சினம் போன்ற தீவிர மனவெழுச்சிகள்(emotions) மற்றும் தன்னுணர்வு மிகுந்து காணப்படுதல்.
  • கற்றவற்றில் அக்கறையும், ஆர்வமும் குறைதல்.
  • தன் மானத்தை குறைக்கக் கூடிய நிகழ்ச்சிகளும் குற்ற உணர்ச்சியை கொடுக்கக் கூடிய நிகழ்ச்சிகளும் நம் மனத்தில் ஒடுக்கப்படுதல்.
  • வயது முதிர்ச்சியின் விளைவாக நரம்புத் தொகுதியில் எழும் உடலியல் மாற்றம்.
  • மறதி நோய் என்று கூறப்படும் 'உளவுப்பிறழ்வு'(psychological problem).
தீர்வு:

         மறத்தல் முழுமையாகத் தீமை கொடுக்கக்கூடியது அன்று பயனற்ற பலவற்றை மறப்பது, புதியவற்றைக் கற்க நமக்கு உதவும். நமக்கு துன்பத்தைத் தரும் அனுபவங்களை மறத்தல் நன்றேயாகும்.............

No comments:

Post a Comment

Translate